தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

வியாழன், 19 ஜனவரி, 2017

நாங்கள் தமிழர்கள்!!!!!!

சீறும் காளையைக் காக்க
சிங்கமென புறப்பட்டோம்

தெள்ளிய எண்ணம் கொண்டோம்
தீர்க்கமான முடிவைக் கொண்டோம்

எண்ணிய எண்ணமெல்லாம் எட்டும்வரை
எட்டுத்திக்கும் ஓயமாட்டோம்

விழா முடிந்ததும் வீடு திரும்புவோம் என நினைத்தீரோ
வீறு நடையிட்டு வருகிறோம்
எங்கள் உரிமையை மீட்டெடுக்க

உங்கள் பணத்தாசைக்காக
எங்கள் பண்பாட்டை விடமாட்டோம்

எங்கள் வீரம் இன்னும் மரிக்கவில்லை
மதியை நாங்கள் இழக்கவில்லை
சதிப்பல புரிந்து எங்களை அழிக்க நினைத்தால்
புதியதோர் விதி செய்வோம்.
ஏனெனில்
நாங்கள் தமிழர்கள்!!!!!!

#தமிழச்சி மெர்லின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *