தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

திங்கள், 1 செப்டம்பர், 2014

தமிழ்மொழி செம்மொழி.....

ஒரு மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் அதற்கு பதினொரு (11) தகுதிப்பாடுகள் இருக்க வேண்டும் என்று மொழியியல் வல்லுநர்கள் வரையறை செய்துள்ளனர். இந்தப் 11 தகுதிப்பாடுகளையும் உருவாக்கியவர்கள் மேலை நாட்டு மொழி அறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று.




ஆனால், என்ன ஒரு வியப்பு என்றால், நம் அன்னைத் தமிழுக்கு மட்டுமே செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றும் முழுமையாக உள்ளது. மேல்நாட்டு வல்லுநர்கள் வகுத்த மொழித் தகுதிப்பாட்டுக்கு நம்முடைய தமிழ்மொழி முற்றும் முழுவதுமாக ஒத்துப் போவது மிகப்பெரிய வரலாற்று உண்மையாகும்.

இனி, தமிழ்ச் செம்மொழிக்கு இருக்கின்ற அந்தப் 11 தகுதிகளைக் காண்போம்:-

1.தொன்மை (Antiquity)


2.தனித்தன்மை (Individuality)


3.பொதுமைப் பண்பு (Common Characters)


4.நடுவு நிலைமை (Neutrality)

5.தாய்மைத் தன்மை (Parental Kinship)

6.பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture art and life experiences of the civilized society)

7.பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை (Ability to function independently without any impact or influence of any other language and literature)

8.இலக்கிய வளம் (Literary prowess)

9.உயர்சிந்தனை (Noble ideas and ideals)

10.கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)


11.மொழிக் கோட்பாடு (Linguitik principles)




சங்ககாலப் பெண் புலவர்கள்...

பெரும்பாலும் ஓளவையாரைத் தவிர பிற பெண்பாற் புலவர்கள் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் சங்க காலத்தில் முப்பத்தி மூன்று பெண்பாற் புலவர் பெருமக்கள் இருந்துள்ளனர். அவர்களின் பெயர் பட்டியல் இதோ....

அள்ளூர் நன்முல்லையார்
ஆதி மந்தியார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஓரம் போகியார்
ஔவையார்
கச்சிப்பேட்டு நாகையார்
கழார்க்கீரன் எயிற்றியார்
காக்கைப் பாடினியார் நச்சோள்ளையார்
காவற்பெண்டு
காமக்கணி பசலையார்
குறமகள் இளவெயினியார்
குறமகள் குறிஎயினியார்.
குமிழி ஞாழலார் நப்பசலையார்
நக்கண்ணையார்
நன்னாகையார்
நெடும்பல்லியத்தை
பக்குடுக்கை நன்கணியார்
பூங்கண் உத்திரையார்
பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு
பெரெயில் முறுவலார்
பேயார்
பேய்மகள் இளவெயினியார்
பொதும்பில் புல்லாளங் கண்ணியார்
பொன்முடியார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மாரிப்பித்தியார்
மாறலோகத்து நப்பசலையார்
முள்ளியூர்ப் பூதியார்
வருமுலையாரித்தி
வெறியாடிய காமக் கண்ணியார்
வெள்ளி வீதியார்
வெண்ணிக் குயத்தியார்
வெண்மணிப் பூதியார்

புகைத்தலைப் பகைத்தால் வரும் நன்மைகள்...

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு ஆபத்தை விளைவித்து, அதற்கு அடிமையாக்கிவிடும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த பழக்கம் பல பேருடைய மன அழுத்தை நீக்க உதவுகிறது. இந்த பழக்கத்தை கைவிட நினைத்த பல பேர், இதற்கு மாற்று பொருளாக நிக்கோட்டின் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். வெகு சிலராலேயே இந்த பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்த முடிகிறது. சரி, இந்த பழக்கத்தை கைவிடுவதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.



சுவாசக் கோளாறுகள் நீங்கும் :-
9 மாதங்களில் அனைத்து சுவாசக் கோளாறுகளும் சரி ஆகும். மேலும் சுவாசப்பையின் கொள்ளளவு 10% அதிகரிக்கும்.

சுவை மற்றும் மனம் திரும்பும் :-
2 நாட்களில் உடம்பில் பரவியுள்ள நிக்கோட்டின் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் பொருட்களின் மீதான சுவை மற்றும் மனம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

இரத்த அழுத்தம் :-
புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதனால், உடலுக்கு உடனடி நன்மைகள் முதல் நீண்ட கால நன்மைகள் வரை பல கிடைக்கும். அதில் முதன்மையானது, அதிகமாக உள்ள இரத்த அழுத்தம் 20 நிமிடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

ஆக்ஸிஜன் சீராகும் :-
இரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு மெதுவாக குறைந்து, 8 மணி நேரத்தில் ஆக்ஸிஜன் அளவு சீராக மாறிவிடும்.

ஆக்கத்திறன் அதிகரிக்கும் :-
4 நாட்களில் உடலில் உள்ள மூச்சு குழாய்கள் அனைத்தும் அமைதியாகி, ஆக்கத் திறனை அதிகரிக்கும்.

செரிமான மாறுதல்கள் :-
புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால், அசிடிட்டி, செரிமானமின்மை மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். மேலும் வயிற்றுப் பொருமல், லேசான வயிற்று போக்கு, மலச்சிக்கல் மற்றும் குமட்டலும் ஏற்படும்.

மனநிலை மாறுதல் :-
இரத்த நாளங்கள் சம்பந்தமான தொகுப்புகளை சுருங்கச் செய்யும் தன்மையை கொண்டவை நிக்கோட்டின். அதனால் இதயம் இயல்பு நிலையை விட, அதிகமாக துடிக்க வேண்டியிருப்பதால், அது வலுவிழந்து போகும். மேலும் புகைப்பழக்கத்தை கைவிடுவதால், இப்போது இதயம் இயல்பு நிலைக்கு திரும்பும். அதனால் சோர்வு மற்றும் தலைச்சுற்று ஏற்படும்.



இரத்த ஓட்டம் சீராகும் :-
2 வாரங்களில் இரத்த ஓட்டம் முன்னேறி, அடுத்த 10 வாரங்களில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

இதய நோய் மற்றும் புற்றுநோய் வராமல் இருக்கும் :-
5 வருடங்களில் இதயமும், நுரையீரலும் புகைப்பிடிக்காதவரை போலவே இயங்கத் தொடங்கிவிடும். அதனால் நெஞ்சு வலி மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அபாயம் குறையும்.

இரத்த ஓட்டத்தில் மாறுதல்:-
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இனி இதயம் வேகமாக துடிக்க தேவையில்லை. இயல்பான இரத்த ஓட்டமாக மாறும் போது, விரல்களில் சிலிர்ப்பு, தலைச்சுற்று, தசை இறுக்கம் மற்றும் நீர் தேங்குதல் போன்ற பக்க விளைவுகளை உடம்பில் ஏற்படுத்தும்.

சுவாச மாறுதல் :-
தீய நஞ்சுத் தன்மையால் உடல் இனி மாசுபடாததால், சுவாச அமைப்பு மீண்டும் மீளவுயிர்ப்பிக்கும். இது சைனஸ், சளி, தொண்டை புகைச்சல் மற்றும் தொண்டை கட்டுதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.


தூக்க மாறுதல் :-
தூங்கும் முறையில் கூட மாற்றங்களை காணலாம். லேசாக கண் அயரும் நேரத்தில் கண் அசைவு இருந்து கொண்டே இருக்கும். மேலும் கெட்ட கனவுகளும் வந்து கொண்டே இருக்கும். மன அழுத்தத்தை நீக்கும் புகைப்பழக்கத்தை நீங்கள் கைவிடுவதால், பகலில் ஏற்படும் டென்ஷன் மற்றும் பிரச்சனைகளை இவ்வகை கனவுகள் தான் கையாளும். அதனால் சிறிது எரிச்சலும் கூட ஏற்படும்.

உயிரை காத்தல் :-
முடிவில், இதையெல்லாம் தாண்டி இந்த பழக்கத்தை கைவிட்டால், அது உங்கள் உயிரை காக்க போவது உறுதி. இந்த பழக்கத்தை கைவிட்டால், அந்த மாற்றத்தை உடல் ஏற்றுக்கொள்ள சிறிது காலம் பிடிக்கும்.



குழந்தைகளுக்கு எந்த தயாரிப்பை பயன்படுத்துகிறீர்கள்...?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அழகு சாதன பொருட்கள் அதிகம் வந்துவிட்டன. ஆனால் அவை தரமானது தானா…? என்று நாம் பார்த்து வாங்குகிறோமா…? அதுவும் குழந்தைகளுக்கு என் விற்பனை செய்யப்படும் பொருட்களில் நஞ்சு என்றால்…. அதிர்ச்சியான செய்தி என்றாலும் அது உண்மை தான். பெரும்பாலும் நாம் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களில் அதிகம் பயன்படுத்துவது ஜான்சன் & ஜான்சன் கம்பெனியின் தயாரிப்புகளைத்தான். ஆனால் அவை குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வீரியம் கொண்டவையாக உள்ளன என்றால் நம்ப முடிகிறதா….?

ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. 



ஆனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது. கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில் அச்சடிக்கப் பட்டுள்ளது. இதை குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள். இதை குழந்தைகள் தெரியாமல் குடித்து விட்டாலோ அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். 



குழந்தைகளுக்கான தயாரிப்பு என்று சொல்லி விட்டு குழந்தைகளை தொடவேண்டாம் என்று சொல்வதில் இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சுத்திகரிக்கபடாத பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இதில் வேடிக்கை என்னவென்றால் Johnson & Johnson தயாரிப்புகளை உபயோகப்படுத்தி அதன் மூலம் வரும் அலர்ஜி மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே மருந்துக்களையும் தயாரித்து விற்கிறது. அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரோடும் விளையாடுகிறார்கள். 

இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன. அண்டை மாநிலமும் உலக அளவிலும் எதிர்ப்பு இருக்கும் இந்த பொருட்கள் நம் மாநிலத்தின் மக்கள் நலத்துறைக்கும் உணவு தரக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே…


நண்பர்களே இதை படித்துவிட்டு உங்கள் உறவினர், நண்பர்கள் அண்டை வீடுகளில் குழந்தகள் இருந்தால் அவர்களின் பெற்றோர்களுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன்…!!!
குழந்தைகள் நம் நாளைய எதிர்காலம். அவர்களின் உயிரில் அலட்சியம் வேண்டாமே….


தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *