தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

சனி, 9 நவம்பர், 2019

மழை!

தமிழ் மழை...!

ஏன் அடைமழை என்கிறோம்?

அடைமழை = வினைத்தொகை
*அடைத்த மழை
*அடைக்கின்ற மழை
*அடைக்கும் மழை

விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை= அடை மழை! 
அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை!


கனமழை வேறு! அடைமழை வேறு!
தமிழில், 14 வகையான மழை உண்டு!

1. மழை
2. மாரி - தாய் மார்பிலொழுகு பால் போல், அலையாது சீராகப் பெயல்.
3. தூறல் - சிறிய மழை
4. சாரல் -  மலையில் பட்டு விழும் மழை.
5. ஆலி - மழை துளி
6. சோனை - விடா மழை
7. பெயல் - நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, காலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும். 
8. புயல் - புயல் என்பது காற்றுடன் வரும் மழையைக்குறிக்கும்
9. அடைமழை - அடைத்த கதவு திறக்காத மழை 
10. கனமழை - அளவில் பெரிய துளிகள் உள்ள மழை.
11. ஆலங்கட்டி - பனிக்கட்டிகள், மழையுடனோ அல்லது தனியாகவோ வானில் இருந்து விழுதல் 
12. ஆழிமழை - கடலில் பொழியும் இடைவிடாத மா மழையை குறிக்கும்
13. துளிமழை - மழை
14. வருள்மழை -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *