தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

புதன், 17 செப்டம்பர், 2014

நம் முன்னோரின் உணவுப் பழக்கங்கள்…

நாம் உணவைப் பற்றி பிறரிடம் கேட்க வேண்டுமெனில் ”சாப்பிட்டாயா?” என்பது மட்டுமே. ஆனால் நம் முன்னோர்கள் பன்னிரண்டு வகையான உண்ணும் முறைகளைக்கொண்டு இருந்திருக்கின்றனர். அவைகள் இவையே..

ü  தின்றல் -- பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.



ü  துய்த்தல் -- உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.

ü  நக்கல் -- நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.



ü  அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.

ü  உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது.

ü  உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.



ü  குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.



ü  பருகல் -- நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.

ü  மாந்தல் -- ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.



ü  கடித்தல் -- கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.



ü  விழுங்கல் -- வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.

ü  முழுங்கல் -- முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *