தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

திருமணத்தின் போது பெரும்பாலும் மணமக்களை வாழ்த்துவோர் “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கஎன்று கூறி வாழ்த்துவது உண்டு. அவற்றை பெரும்பாலானோர் பதினாறு குழந்தைகளைப் பெற்று வாழ வேண்டும் என்று தவறான அர்த்தம் கொண்டுள்ளனர். ஆனால் அது பதினாறு செல்வங்களைக் குறிக்கிறது. அவை என்னவென்று பார்ப்போமா?

Ø  கலையாத கல்வி
Ø  கள்ளமில்லா நட்பு
Ø  குறையாத வயது
Ø  குன்றாத வளமை
Ø  மறையாத இளமை
Ø  பரவசமான பக்தி
Ø  பிணியற்ற உடல்
Ø  சலியாத மனம்
Ø  அன்பான துணை
Ø  தவறாத சந்தானம்
Ø  தாழாத கீர்த்தி
Ø  மாறாத வார்த்தை
Ø  தடையற்ற கொடை
Ø  தொலையாத நிதி
Ø  கோணாத செயல்
Ø  துன்பமில்லா வாழ்வு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *