தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

அறுவகைச் சுவை என்ன? அவற்றின் பயன் என்ன?

அறுவகைச் சுவைகள் இவையே:
1     இனிப்பு
2     கசப்பு
3     புளிப்பு
4     உவர்ப்பு
5     கார்ப்பு
6     துவர்ப்பு


இந்த சுவைகளின் பயன்களும் அவை அடங்கியுள்ள உணவுப் பொருட்களும் பார்க்கலாமா..!!!

இனிப்பு:
உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாததைக் கூட்டும்.
உணவுப் பொருட்கள்:
உருளை, காரட், கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானிய வகைகள், கரும்பு போன்ற தண்டு வகைகளிலும் இச்சுவை உள்ளது.


புளிப்பு:
இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாததைக் கூட்டும்.
உணவுப் பொருட்கள்:
எலுமிச்சை,, புளிச்சக் கீரை,, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் இந்த சுவை உள்ளது.


கசப்பு:
உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்தியைக் கூட்டுகிறது. சளியைக் கட்டுப்படுத்துகிறது.
உணவுப் பொருட்கள்:
பாகற்காய், சுண்டைக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை உள்ளது.


உவர்ப்பு:
உடம்பின் ஊக்கத்தைக் குறைத்து ஞாபகச்க்தியைக் கூட்டும்
உணவுப் பொருட்கள்:
கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய்,பீர்க்கங்காய் போன்றவற்றில் இந்த சுவை உள்ளது.

கார்ப்பு:
 உடலுக்கு சூட்டைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளைக் கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
உணவுப் பொருட்கள்:
வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.


துவர்ப்பு:
இரத்தம் உறைவதைத் தடுக்கவல்லது.
உணவுப் பொருட்கள்:

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்றவற்றில் இந்த சுவை உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *