தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

திங்கள், 1 செப்டம்பர், 2014

குழந்தைகளுக்கு எந்த தயாரிப்பை பயன்படுத்துகிறீர்கள்...?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அழகு சாதன பொருட்கள் அதிகம் வந்துவிட்டன. ஆனால் அவை தரமானது தானா…? என்று நாம் பார்த்து வாங்குகிறோமா…? அதுவும் குழந்தைகளுக்கு என் விற்பனை செய்யப்படும் பொருட்களில் நஞ்சு என்றால்…. அதிர்ச்சியான செய்தி என்றாலும் அது உண்மை தான். பெரும்பாலும் நாம் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களில் அதிகம் பயன்படுத்துவது ஜான்சன் & ஜான்சன் கம்பெனியின் தயாரிப்புகளைத்தான். ஆனால் அவை குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வீரியம் கொண்டவையாக உள்ளன என்றால் நம்ப முடிகிறதா….?

ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. 



ஆனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது. கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில் அச்சடிக்கப் பட்டுள்ளது. இதை குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள். இதை குழந்தைகள் தெரியாமல் குடித்து விட்டாலோ அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். 



குழந்தைகளுக்கான தயாரிப்பு என்று சொல்லி விட்டு குழந்தைகளை தொடவேண்டாம் என்று சொல்வதில் இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சுத்திகரிக்கபடாத பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இதில் வேடிக்கை என்னவென்றால் Johnson & Johnson தயாரிப்புகளை உபயோகப்படுத்தி அதன் மூலம் வரும் அலர்ஜி மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே மருந்துக்களையும் தயாரித்து விற்கிறது. அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரோடும் விளையாடுகிறார்கள். 

இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன. அண்டை மாநிலமும் உலக அளவிலும் எதிர்ப்பு இருக்கும் இந்த பொருட்கள் நம் மாநிலத்தின் மக்கள் நலத்துறைக்கும் உணவு தரக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே…


நண்பர்களே இதை படித்துவிட்டு உங்கள் உறவினர், நண்பர்கள் அண்டை வீடுகளில் குழந்தகள் இருந்தால் அவர்களின் பெற்றோர்களுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன்…!!!
குழந்தைகள் நம் நாளைய எதிர்காலம். அவர்களின் உயிரில் அலட்சியம் வேண்டாமே….


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *