தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

சனி, 16 ஆகஸ்ட், 2014

யானைக்கு இத்தனை பெயர்களா...?

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். அவ்வளவு பெருமைகுறிய யானையை நம் முன்னோர்கள் நிறத்தைக் கொண்டும், பருவத்தைக் கொண்டும், வகையைக் கொண்டும் தனிப் பெயரிட்டு அழைத்துள்ளனர். ஒரு விலங்கை தமிழர்கள் பல விதமாக அழைத்துள்ளனர் என நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது. இத்தனை பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன் அப்பப்பா…..!


யானையின் ஏனைய தமிழ்ப்பெயர்கள் :
இவை சங்க இலக்கியங்களிலும், பாடல்களிலும் பல்வேறு இடங்களில் கையாளப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மனிதர்களை போலவே யானைகளுக்கும் இளமை கால பெயர்கள் உண்டு...

கயந்தலை - பிறந்த உடனான யானையின் பெயர்
போதகம் - எழுந்து நிற்க தொடங்கும் பருவம்
துடியடி - ஓடி ஆடி விளையாடும் பருவம்
களபம் - உணவு தேடி செல்லும் பயிற்சி பெரும் பருவம்
௫. கயமுனி - மற்ற இளம் யானைகளுக்கு பயற்சி அளிக்கும்,பருவம்


பொதுவான பெண் யானையின்பெயர்கள்:
பிடி
அதவை
வடவை
கரிணி
அத்தினி


நிறங்களை கொண்டு யானையின் பெயர்கள் :
கரிய நிறம் : யானை / ஏனை
வெள்ளை நிறம் : வேழம்


யானையின் மற்ற காரண பெயர்கள்
உம்பல் - உயர்ந்தது
கறையடி - உரல் போன்ற பாதத்தை உடையது
பெருமா - பெரிய விலங்கு
வாரணம் - சங்கு போன்ற தலையை உடையது
புழைக்கை / பூட்கை / தும்பி - துளையுள்ள கையை உடையது
ஓங்கல் - மலை போன்றது
பொங்கடி – பெரிய பாதத்தை உடையது
நால்வாய் – தொங்குகின்ற வாயை உடையது
குஞ்சரம் / உவா - திரண்டது
கள்வன் - கரியது
புகர்முகம் – முகத்தில் புள்ளியுள்ளது
கைம்மலை - மலையை போன்ற கையை உடையது.
வழுவை - உருண்டு திரண்டது
யூதநாதன் – யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்
மதோற்கடம் - மதகயத்தின் பெயர்
கடகம் - யானைத்திரளின் / கூட்டத்தின் பெயர்.


யானையின் ஏனைய பெயர்கள்:
களிறு
மாதங்கம்
கைம்மா
உம்பர்
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
எறும்பி
ஒருத்தல்
நாக
கும்பி
கரேணு
கொம்பன்
கயம்
சிந்துரம்
வயமா
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *