தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

திங்கள், 21 ஜூலை, 2014

அறிந்த நூலும் அறியாத தகவல்களும்...

·         திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
·         திருக்குறளில் தமிழ்என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
·         திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
·         திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
·         திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
·         திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
·         திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
·         திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
·         திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
·         திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
·         ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.
·         திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
·         திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
·  திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
·         திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
·         திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
·         திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
·         திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
·         திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
·         திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
·         திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரேஎழுத்து-னி
·         திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,
·         திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
·         திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
·         திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
·         திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
·         திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
·         திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
·         திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
·         எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
·         ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
·         திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
·         திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்எ
· திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *